10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!





கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில்,கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.


இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. பொதுத்தரவை சந்திக்கவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவ்வப்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது.


இதற்கிடையில்,10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நிச்சயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே கூறியிருந்தார்.


இந்நிலையில்,10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று  வெளியாகும்  என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்தேர்வுக்கான அட்டவனையை அமைச்சர் வெளியிடவுள்ளார்.



Comments

Popular posts from this blog