ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுமா?


திருப்பூர்:தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துசாமி அறிக்கை:திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பரமசிவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.மேலும், புதிதாக துவக்கப்பட்ட முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர், கணித பட்டதாரி ஆசிரியர், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது.மாணவர் நலன்கருதி, இப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, நடந்து வரும் பொதுமாறுதல் கலந்தாய்வில் நிரப்பிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog