PG-TRB- தேர்வு எழுதியவர்களுக்கு புது தகவல்





முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று TRB அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்வானது பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தம் 2,207 காலியிடங்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. 190 தேர்வு மையங்களில் இரண்டரை லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்களுக்கு புதிய தகவல் வெளிவந்துள்ளது.


அதில், தேர்வுக்கான விடைகள் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் ஒரு வாரத்திற்குள் இணையத்தில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இதனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதிய தேர்வர்கள் அனைவரும் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை கவனமாக பின்தொடருமாறு கூறியுள்ளார். மேலும், இந்த தேர்வும் தேர்ச்சி அடைந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச் மாதத்திற்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog