TRB: தேர்வு மையத்தில் நகை, பெல்ட் அணிந்து வரக்கூடாது.. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் சர்ச்சை..


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 20 வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று தேர்வுகள் நடைபெறாது.3 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வு 2 ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் தேர்வுகள் தொடங்கும். இந்நிலையில் தேர்வு எழுத வருவோருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் தேர்வர்களின் ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


* தேர்வர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் கட்டாயம். ஒரு தவணை தடுப்பூசி போட்டோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் காலக்கெடு முடிந்திருக்கக் கூடாது.


* தடுப்பூசி போடாதோர் தேர்வு நேரத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.


* இதற்காகத் தேர்வர்கள் 1.30 மணி நேரம் முன்னதாக அதாவது முதல் ஷிஃப்டுக்கு 7.30 மணிக்கும், 2-வது ஷிஃப்டுக்கு 12.30 மணிக்கும் வர வேண்டியது அவசியம்.


* தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் புகைப்படத்தைக் கொண்டு வர வேண்டும். அத்துடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகிய அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துவர வேண்டும்.


* தேர்வர்கள் நகைகளை அணியக்கூடாது.


* பெல்ட் அணிந்திருக்க அனுமதியில்லை. மேலும் ஹைஹீல்ஸ் செருப்புகளுக்கும் அனுமதி இல்லை. சாதாரண செருப்புகளை மட்டுமே அணிந்திருக்க வேண்டும்.


* தேர்வர்களுக்கு பேப்பர், பேனா மற்றும் பென்சில் ஆகியவை தேர்வுக் கூடத்திலேயே வழங்கப்படும். தேர்வு முடிந்து வெளியே வரும்போது தாங்கள் பெற்ற பேப்பரை மீண்டும் தேர்வு அலுவலரிடமே ஒப்படைத்துவிட வேண்டும்.


* ஹால் டிக்கெட்டைத் தேர்வு மையத்தில் உள்ள தேர்வு அலுவலர் பெற்றுக்கொள்வார். ஆகவே ஹால் டிக்கெட் நகலைத் தங்களிடம் ஒரு காப்பி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.


* அதேபோல மொபைல் போன்களுக்கு அனுமதியில்லை. கால்குலேட்டர்கள், கணித வாய்ப்பாடுகள், டிஜிட்டல் டயரிகள் மற்றும் புத்தகங்களுக்குத் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை.


* தேர்வு மையங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருப்பர்.


* தேர்வு மையத்தில் தடையில்லாத மின்சார வசதி, போதிய போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


* முறைகேட்டைத் தடுக்க, அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதனையில் ஈடுபடுவர்.


நீட் தேர்வின்போது நகை, பெல்ட் அணியக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு சர்ச்சை எழுந்தது. அதேபோலத் தற்போது டிஆர்பி தேர்வு கட்டுப்பாடுகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog