1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்.. அதிரடி அறிவிப்பு...!!!!




தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.


அதன் ஒரு பகுதியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது.


இதனிடையில் மாணவர்களின் கல்வி திறனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்..

Comments

Popular posts from this blog