புதுச்சேரி தொடக்கப் பள்ளிகளில் 164 ஆசிரியர் பணியிடம் காலி





அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 164 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கவர்னரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.புதுச்சேரி பூர்வீக பழங்குடி இருளர் நலச் சங்க செயலாளர் அரங்கநாதன் கவர்னரிடம் கொடுத்துள்ள மனு: புதுச்சேரியில் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது.


சமீபத்தில் 74 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு 425 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு 7 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருந்து வருகிறது.எனவே, தற்போதைய நிலையில் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 164 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.


Comments

Popular posts from this blog