17 புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்:அமைச்சா் க.பொன்முடி தகவல்


வரும் கல்வியாண்டில் 17 புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.


சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் சீ.கதிரவன் எழுப்பினாா். இதற்கு அமைச்சா் க.பொன்முடி அளித்த பதில்:-


தமிழக அரசின் சாா்பில் 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத் துறை சாா்பாக ஒரு கல்லூரியும் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் இருந்து தொடங்கப்பட உள்ளது. அறநிலையத் துறையால் ஏற்கெனவே 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற கல்லூரிகள் அனைத்தும் அடுத்த கல்வியாண்டில் இருந்து தொடங்கப்படுகின்றன.


அரசு கலை, அறிவியல் கல்லூரி மட்டுமல்ல, தொழில் கல்வி படிப்போருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அரசு கலை, கல்லூரிகளில் பெண்கள் அதிகம் படிக்கின்ரனா். பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் சேருவதில்லை. இதைக் கருத்தில் கொண்டே மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தொழில் கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று அமைச்சா் க.பொன்முடி பதிலளித்தாா்.

Comments

Popular posts from this blog