தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வரும் 19-ம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!




பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் வரும் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இந்தக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுவதன் காரணமாக, அதற்கு முந்தைய நாளான 19-ம் தேதி சனிக்கிழமையன்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog