'குரூப் - 2' விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் நிறைவு




குரூப் - 2 மற்றும் 2 ஏ'பணிகளில் அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்அவகாசம், நாளை மறுநாள் முடிவதால், தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவிகளில் 116 இடங்களையும், குரூப் - 2 ஏ பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 23ல் துவங்கியது. தேர்வில், 20 லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 


பட்டப்படிப்பு முடித்த அனைவரும், குரூப் - 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog