குரூப் 2, 2A தேர்வர்களுக்கு அலெர்ட்.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. உடனே போங்க.!!!




குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் விவரங்களைத் தவறாக உள்ளீடு செய்திருந்தால் அதைத் திருத்தம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " குரூப் 2, குரூப் 2ஏ தேர்விற்கு, இணைய வழியில்‌ விண்ணப்பிக்க 23 கடைசி நாள்‌ ஆகும். அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில்‌, பலர்‌ விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த‌ பிறகு, சில தகவல்களைத் தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும்‌, அவற்றைத் திருத்தம்‌ செய்ய அனுமதிக்கக் கோரியும்‌ தேர்வாணையத்தைத் தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாகத் தொடர்புகொண்டனர்.


எனவே தேர்வர்களுக்கு, வாய்ப்பளிக்கும்‌ வகையில்‌ மேற்கூறப்பட்ட பதவிகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள விரும்புவோர்‌ 14 முதல் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களே தனது OTR மூலமாக திருத்தம்‌ மேற்கொள்ளளாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி கடைசி நாளாகும்.


தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் ஐந்து நாட்களே மீதமுள்ளன. பெரும்பாலானோர் கடைசி நாளில் விண்ணப்பிக்கலாம் என்று அஜாக்கிரதையாக உள்ளனர். இது மிகவும் தவறானது. கடைசி நேரத்தில் அதிகம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் சர்வர் டவுன் போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். எனவே உடனடியாக விண்ணப்பிக்கவும் என TNPSC சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog