திண்டிவனத்தில் 26ம் தேதிதனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்




விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 26ம் தேதி திண்டிவனத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பாலமுருகன் செய்திக்குறிப்பு:திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை 9:00 முதல் மாலை 3:00 வரை முகாம் நடக்கிறது.


இதில், 120க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, பி.டெக்.,-நர்சிங், எம்.பி.ஏ., கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். 

இதற்காக, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 226417 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog