அகமதிப்பீட்டு மதிப்பெண் தேர்வு:பள்ளிகளில் தேர்வு




உடுமலை;பிளஸ் 2 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை அளிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.பிளஸ் 2, பொதுத்தேர்வு வரும் மே மாதம் நடத்தப்படுகிறது.


முன்னதாக, மாணவர்களின், 'இன்டர்னல்' மற்றும் 'பிராக்டிக்கல்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.அவ்வகையில், அறிவியல் பாடங்களுக்கு, 30 மதிப்பெண்; கணக்கியல் பாடங்களுக்கு, 10 மதிப்பெண்கள் என கணக்கிடப்படுகிறது. அதன்படி, அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, உடுமலை கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை அளிக்கும் வகையில், மூன்று தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில், அதிகபட்சமாக பெறும் மதிப்பெண், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத்தேர்வுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய செய்முறை விளக்க குறிப்பு நோட்டுகள், மாணவர்களிடம் சேகரிக்கப்படும். பின்னர், செய்முறை விளக்க நோட்டுகள் மற்றும் அவர்களின் ஆய்வக செயல்பாடுகளை வைத்து, மதிப்பெண் வழங்கப்படும்.இதேபோல், அகமதிப்பீட்டு மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும் பாடக்குறியீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை உறுதி செய்து கொள்வர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog