'குரூப் - 2' தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி. மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.




குரூப் - 2, 2 ஏ' பணிகளில் அடங்கிய, 5,529 பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று முடிகிறது.


விண்ணப்ப பதிவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில், குரூப் - 2 பதவிகளில் 116; குரூப் - 2 ஏ பதவிகளில் 5,413 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், மே 21ல் முதல்நிலை தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 23ல் துவங்கியது.


பட்டப்படிப்பு முடித்த அனைவரும், குரூப் - 2, 2 ஏ பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.இந்நிலையில், புதிதாக விண்ணப்பிக்கவும், விண்ணப்ப விபரங்களை திருத்தவும், கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog