புதுச்சேரி காவலர் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது!



புதுச்சேரி காவல்துறையில் நிரப்பப்படாமல் இருந்த 390 பணியிடங்களுக்கு உடல் தகுதித் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.


இந்த உடல் தகுதி தேர்வில் 2 ஆயிரத்து 644 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனை தொடர்ந்து தகுதி பெற்றவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள 5 மையங்களில் கடந்த சனிக்கிழமை எழுத்து தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரத்து 626 பேர் தேர்வுகளை எழுதினர்.


இந்நிலையில், இந்த காவலர் தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 21) திங்கட்கிழமை நள்ளிரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் கூறுகிறது.

Comments

Popular posts from this blog