நாடு முழுவதும் ஒன்றிய அரசு துறைகளில் 8.70 லட்சம் பணியிடங்கள் காலி




புதுடில்லி, மார்ச் 17 நாடு முழுவதும் ஒன்றியஅரசு துறைகளில் 8.70 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது .


நாடாளுமன்ற இரு அவை களிலும் நேற்று (16.3.2022) கேள்வி நேரத்தின்போது அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக உறுப்பினர்களின் பல்வேறு கேள்வி களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் பதிலளித்தனர் .


இதில் குறிப்பாக , ஒன்றிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய பணி யாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதிலளித்தார் .


அவர் கூறும்போது , 1-.3-.2020 நிலவரப்படி ஒன்றிய அரசின் 77 துறை களில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 941 பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டு உள்ளது . இதில் 31 லட்சத்து 33 ஆயிரத்து 658 பேர் பணி யாற்றுகிறார்கள் . 8 லட்சத்து 71 ஆயி ரத்து 283 பணியிடங்கள் காலியாக உள்ளன . இந்த புள்ளி விவரங்கள் செலவினத்துறையில் இருந்து பெறப்பட்டவை என தெரிவித்தார் .


ரயில்வேயில் 2.98 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் , 1.40 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார் .


இந்த நடவடிக்கை விரைவு படுத்தப் பட்டு வருவதாக கூறிய அவர் , ரயில்வேயில் காலியாக உள்ள தாழ்த்தப்பட்ட , பழங்குடியினர் பிரிவினருக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் தேவை இல்லை எனவும் கூறினார் .


இதைப்போல நாடு முழுவதும் அய் . அய் . டி . கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் பதிலளித்தார் .


அப்போது அவர் , நாடு முழுவதும் பல்வேறு அய் . அய் . டி . களில் 4,300- க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்தார் .


இதில் அதிகபட்சமாக கரக்பூர் அய் . அய் . டி . யில் 815 காலியிடங்களும் , மும்பையில் 532 இடங்களும் , தன்பாத்தில் 447 இடங்களும் , சென்னையில் 396 இடங்களும் , கான்பூரில் 351 இடங்களும் , ரூர்க்கி யில் 296 இடங்களும் காலியாக உள்ளதாக கூறினார் .


இந்த பணியிடங்களை விரைவாக நிரப்புமாறு அனைத்து அய் . அய் . டி . களையும் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக கூறிய சர்க்கார் , இந்த பணியமர்த்தல் நடவடிக்கையில் பல நிலைகள் அடங்கியிருப்பதால் நேரம் எடுக்கும் எனவும் கூறினார் .


மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சுபாஸ் சர்க்கார் , காஷ்மீர் , ஆந்திரா , பீகார் , ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒரு ஒன்றிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் காலி யாக இருப்பதாகவும் , இந்த காலியிடங்களை நிரப்புவது ஆண்டு முழுவதும் நடைபெறும் ஒரு தொடர் நடவடிக்கை எனவும் தெரிவித்தார் .

Comments

Popular posts from this blog