அரசு பள்ளிகளில் டீச்சர் வேலை.. அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்..!!!!




தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் பரப்புரை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.


அந்த விழாவில் "நம் பள்ளி நம் பெருமை" என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான மேலாண்மை குழுக்களின் அவசியம் பற்றியும், மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ள இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டுகளில் இருந்து வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும். பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.


அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களை அதிகப்படுத்துவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்என்று அமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ளார் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog