சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்கள்.. மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி இதற்கான தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog