திண்டிவனம் அடுத்த செ.கொத்தமங்கலம் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை




திண்டிவனம் அடுத்த செ.கொத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


செ. கொத்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பிலிருந்து 5 வகுப்பு வரை 63 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.இப்பள்ளியில், ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என இரண்டு பேர் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இருந்த ஒரு ஆசிரியரையும் கடந்த 28ம் தேதி வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்துள்ளனர்.தற்போது தலைமையாசிரியர் மட்டும் பணிபுரிந்து வருகிறார். இதனால், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளியை குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கப்படாததால் தினமும், மாணவர்கள் வெளியே காத்திருக்கும் அவலம் உள்ளது.இதனால், அப்பள்ளிக்கு, கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, செ.கொத்தமங்கலம் பள்ளிக்கு கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமிக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog