ஏப்., 18ல் வேளாண் முதலாண்டு வகுப்பு துவக்கம்




கோவை:முதலாம் ஆண்டு பி.எஸ்சி., வேளாண் மாணவர்களுக்கு, ஏப்., 18 முதல் வகுப்பு துவங்க உள்ளதாக வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகளில், 12 இளநிலை பட்டப்படிப்புகளில், 4,670மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.


இதற்கான கலந்தாய்வு, பிப்., 23ல் துவங்கியது. தொடர்ந்து கவுன்சிலிங் நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் முடிக்க பல்கலை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, உறுப்புமற்றும் இணைப்பு கல்லுாரிகளை, ஏப்., 18ல் துவங்க பல்கலை முடிவு செய்துள்ளதாக, வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog