தொலைதூர கல்வி நிறுவனம் மூலம் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.!



தொலை தூரக் கல்வி இயக்ககம் வாயிலாக பட்டப்படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பல்கலைக்கழக தொலை நிலை கல்வி நிறுவனத்தில் நிகழ் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேரக்கை நடைபெறுவதாகவும், இதற்காக வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை மையத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர, மற்ற அனைத்து வேலை நாட்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் 131 கற்றல் மையங்கள் வாயிலாகவும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog