டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே!. இதை மட்டும் செய்யாதீங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு...!!!!!




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.


அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலர் இதனை அறியாமல் தவறாக விண்ணப்பிக்கின்றனர். ஆகவே தேர்வு அறிக்கை வெளியான அன்றோ அல்லது அதற்கு பிறகோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படத்தின் கீழே விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதியை குறிப்பிட வேண்டும். மேலும் விபரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Comments

Popular posts from this blog