ஆசிரியர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்குவது அவசியம்:முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்




அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புடன் உயிர் பாதுகாப்பு வழங்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்,'' என, தேனி பொது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அன்பழகன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன் 10ம் வகுப்பு மாணவர் கத்தியுடன் பள்ளியில் தகராறு செய்துள்ளார்.


தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகம் எடுத்து வராமல் இருந்த மாணவர் ஆசிரியரை தாக்கியது, மாணவர்கள் சிலர் ஆசிரியர்களை கேலி செய்யும் அவலமும் நடந்தது. இது தேனி ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்குவது அவசியம். இதுபோன்ற சம்பவங்களால் மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் வேதனையில் உள்ளோம் என்றார்.

Comments

Popular posts from this blog