ஆசிரியர், வகுப்பறை பற்றாக்குறை: மேயரிடம் மனு அளித்த மக்கள்



திருப்பூர்:மாநகராட்சி துவக்க பள்ளியில் உள்ள ஆசிரியர், வகுப்பறை பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாஸ்கோ நகர் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், மேயர் தினேஷ்குமாரிடம் அளித்த மனு:மாஸ்கோ நகர் மாநகராட்சி பள்ளியில், 870 பேர் படிக்கின்றனர்.


இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு வகுப்பில் 120 பேர் வரை உள்ளனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே வகுப்பு நடைபெறுகிறது. இதிலும் வகுப்புக்கு 70 பேர் என்ற அளவில் உள்ளனர்.மேலும் இங்கு ஆசிரியர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர். மாணவர் நலன் கருதி, கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog