காவல் உதவி ஆய்வாளா் தோவுக்கு விண்ணப்பிப்போா் கவனத்துக்கு...




காவல் உதவி ஆய்வாளா் தோவுக்கு விண்ணப்பிப்போருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவாணையம் மூலம் கோட்டம் மற்றும் ஆயுதப் படையில் 444 உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7ஆம் தேதி கடைசி நாளாகும்.


இந்தப் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்யவும், அவா்களுக்கு உதவும் வகையிலும் ஆணையரத்தில் உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது.


 விண்ணப்பதாரா்கள் நேரிலோ அல்லது 9445465974, 996596614 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog