TNPSC தேர்வர்கள் இந்த ஆவணத்தை இணைக்க தவறினால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.! உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் 




TNPSC தேர்வர்கள் ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


One Time Registration கணக்கு வைத்திருக்கும்‌ அனைத்து விண்ணப்பதாரர்களும்‌, தங்களது ஆதார்‌ எண்ணை ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ தவறாமல்‌ இணைக்க வேண்டும்‌ என்றும்‌, அதனடிப்படையில்‌, எதிர்காலத்தில்‌ தேர்வாணையத்தால்‌ வெளியிடப்படும்‌ அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இந்நிலையில்‌, ஒருங்கிணைந்த Group II, Group IIA தேர்விற்கு, இணையவழியில்‌ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்‌ ஆகும்‌. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்‌, தங்களது ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும்‌. 


அவ்வாறு, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைப்பதற்கு, 01.02.2022 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி, இன்றே கடைசி நாள்‌ 28.02.2022 ஆகும்‌. எனவே‌, இன்றைக்குள் ஆதார்‌ எண்ணை ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ இணைக்காதவர்கள்‌, ஒருங்கிணைந்த Group II மற்றும்‌ IIA தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Comments

Popular posts from this blog