TANCET நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்




டான்செட் தேர்வு எழுத விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



வரும் 2022 -23ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று சொல்லப்படும் அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது.


இந்நிலையில் முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டான்செட் தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


அதேசமயம் தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் பிஇ ,பிடெக் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது . வருகிற 15-ஆம் தேதி 15 தேதிகளில் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.


தேர்வுக்காக https://tanct.annauniv.edu/tancet என்ற இணையதளத்தின் மூலம் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக பொது மற்றும் எம்பிசி, பிசி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ் டி ,எஸ் சி ஏ ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் 300 ரூபாய் செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு தேர்வு எழுத விரும்புபவர்கள் தனித்தனியே ரூ.600 அல்லது ரூ.300 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 நுழைவுத்தேர்வு சென்னை ,கோயம்புத்தூர் ,சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி ,மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர் ,திருநெல்வேலி ,திருச்சி, வேலூர் ,விழுப்புரம் ,விருதுநகர் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே 2ம் தேதி அதற்கான இணையதளத்தில் வெளியிடப்படும்.

Comments

Post a Comment

Popular posts from this blog