புதுச்சேரியில் 1-9 ஆம் வகுப்புகளுக்கான இறுதி தேர்வு தேதி அறிவிப்பு..!



புதுச்சேரி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.


புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதன்படி, பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. 29-ந்தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இந்த தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



Comments

Popular posts from this blog