12-ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்தது புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்



தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி இருந்தன.


இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கணிதப் பாடத்திற்கான 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் இன்று மதியமே வெளியானது. தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த இரு வகை வினாத்தாள்களும் கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தடுத்து வினாத்தாள் கசிவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தமிழக அரசின் தேர்வு முறை மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது.


12-ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், புதிய வினாத்தாளைக் கொண்டு நாளை கணித பாட தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog