குருப் 4 தேர்விற்கு 8.39 லட்சம் பேர் விண்ணப்பம்!




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 4 போட்டித் தேர்விற்கு நேற்று (ஏப். 19) மாலை வரையில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 68 பேர் விண்ணபித்துள்ளனர்.


டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில், மொத்தம் 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (ஏப்ரல் 20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 4 தேர்வுக்கு நேற்று (ஏப்.19) மாலை 5 மணி வரையில், 8 லட்சத்து 39 ஆயிரத்து 68 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் 24ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெறுகிறது.


விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். வரும் 28ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog