தமிழகத்தில் 84,414 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் - ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வு எழுத தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவர்கள்




2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 84 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கு நடைபெற உள்ளது, இந்த 2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


அதில் தமிழகத்திலிருந்து 84,214 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.


கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தில் இருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் நீர் தேர்வுக்காக வந்துள்ளது, அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 11 லட்சம் விண்ணப்பதாரர்களின் 1.5 லட்சம் பேர் மகாராஷ்டிரத்தில் இருந்தும் 1.2 ஒரு லட்சம் பேர் உத்திரப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு நீட் தேர்வை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து 84,214 மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog