9,494 ஆசிரியர் பணியிடங்கள்... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!!



ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்று சட்டப்பேரவையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல திட்டங்களை தெரிவித்தார்.


தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், தொடக்கப்பள்ளிகளில் 7500 திறன் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கூறினார். 15 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருந்தாலும் 9 ஆயிரத்து 494 பேர் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள் என கூறியவர், அரசு பள்ளி மாணவர்களின் செயல்வழி கல்வியை ஊக்குவிக்க பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog