"சிஸ்டம்" மாறுகிறது.. TNPSC தேர்வு குறித்து பிடிஆர் வெளியிட்ட சூப்பர் தகவல்.. என்னன்னு பாருங்க..!



டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு போன்ற அனைத்தையுமே மறு ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, விரைவில் குழு அமைக்க உள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்..


அத்துடன் சூப்பர் தகவல் ஒன்றையும் இது தொடர்பாக வெளியிட்டுள்ளார்.


சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கிள்ளியூர் ராஜேஷ் குமார்பேசும் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.


தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக உள்ளது. சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்கள் அரசு வேலை வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்...



கன்னியாகுமரி


தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 50,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வுக்கு 75,000 பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு பயிற்சி நிலையம் இல்லை.. அதனால், இங்கு ஒரு பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.


நிதியமைச்சர்


இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "பல வகையில் தகவல் அடிப்படையில் மேலாண்மை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார்... அதற்கேற்பவே நாங்களும் தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகிறோம்... அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தனி சூழ்நிலை காணப்படுகிறது..


கன்னியாகுமரி

 காரணம், கூடுதல் படிப்பு அறிவு, கூடுதல் நிர்வாகம், கூடுதல் பட்டதாரிகள் உள்ளனர்.. இதனாலேயே குறைவான வேலைவாய்ப்பு காணப்படுகிறது.. இதை திருத்தம் செய்ய தொழில் ரீதியாகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தமிழக அரசு ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கிறது.. அவைகளில் பல பங்குகள் உள்ளன.. அதையெல்லாம் நாம் வேறு ஒரு நாளில் பேசலாம்...


நிதிச்சுமை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பாக 2, 3 ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளன.. குளறுபடிகளும் நடந்துள்ளன. பல ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆய்வு செய்யாமல் உள்ளது... இன்று 3 லட்சத்துக்கு மேல் காலி பணியிடங்கள் உள்ளன. சில இடங்களில் கூடுதலாகவே உள்ளனர்.. சில இடங்களில் யாரும் இல்லாமல் உள்ளனர்... இதற்கு நடுவில் நிதி சுமையும் உள்ளது. ஒரு குழு அமைத்து இதையெல்லாம் மறு ஆய்வு செய்ய உள்ளோம் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog