உயர்நீதிமன்ற தீர்ப்பால் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது! முதல்வர் பரிசீலனை செய்ய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.!




உயர்நீதிமன்ற தீப்பால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சிப்பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 RTE Act அடிப்படையில் தமிழ்நாட்டில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET தேர்ச்சி கட்டாயம் என்ற சூழல் உள்ளது.


தமிழகத்தில் RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.


அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனக்கூறி ஊதியம் தவிர மற்ற எந்த பணப்பயனுமின்றி தவித்துவருகின்றார்கள்.


தற்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி தேர்விலிருந்து விலக்களித்துஅரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு. வழங்கி உதவுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்தோம்.


ஆனால் அப்போதைய அமைச்சர் ஒவ்வொரு முறையும் ஆசிரியர்களை கைவிடமாட்டோம் என்று கூறியே கைவிட்டது வேதனையளிக்கிறது.


23/8/10 முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிதல் இன்றி பணி நியமனத்திற்கு அனுமதி அளித்ததால் தற்போது வரை சுமார் 1500ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட சூழல் ஒருபுறம் இருக்க,


TET நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் பத்து ஆண்டுகள் பணிநிறைவு பெறும் சூழலிலும், இன்றும் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.


பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில் உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு பாதுகாப்பு தரும் என நம்பினோம்.


ஆண்டுக்கு இருமுறை நடத்தவேண்டிய தேர்வு கடந்த 10 ஆண்டுகளில் 5 முறைதான் நடத்தினார்கள்.அதிலும் ஓவ்வொருத்தரும் அவர்கள் எடுத்த பாடத்தில் 100 % தேர்ச்சிகாட்டினார்கள்.


தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஒரே பாடத்தில் பாடம் நடத்தியவர்கள் அனைத்து பாடமும் கொண்ட டெட் தேர்ச்சிப்பெறுவது சிரமம்.


டெட் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த2020 பிப்ரவரி மாதம் அப்போதைய மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


அதன் பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே நிம்மதியடைந்தாலும் கடைசிவரை தீர்வுகாணபடவில்லை. பதவியிலிருக்கும்வரை வரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.


தற்போது 23/08/2010 முதல் தற்போது வரையிலான காலகட்டம் மொத்தமாக 12ஆண்டுகள் நிறைவுற்றதால் தேர்வு நிலை ஆசிரியர்களாக தரம் உயர்கின்றனர்.


வளரூதியம், ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஊதியப் பலன்கள் நிறுத்தக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தும் கூட, மாநிலம் முழுவதும் சமமற்ற முறையில் தரப்படுகின்றன.


பெரும்பாலான ஆசிரியர்களின் பதவி உயர்வுகள் தகவல்கள் இன்றி தேங்கி நிற்கின்றன. உயர்கல்வி படிக்ககூட அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர் இந்த நிலையில் நீதிமான்ற தீர்ப்பு TET தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதுகேள்விக்குறியாகியுள்ளது.


ஆகவே நல்லாட்சி நடத்தி இந்தியாவிற்கே முன்மாதிரி முதல்வராகத் திகழும் தமிழக முதலமைச்சர் அவர்கள் கருணை அடிப்படையில் நல்ல அறிவிப்பு வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.


RTE - TET சிக்கல் சரிசெய்யும் பொருட்டு தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காப்பாற்ற ஆவனசெய்யவேண்டி தமிழகமுதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog