ஆசிரியர் தகுதி தேர்வு.. ஏப். 26 வரை விண்ணப்பிக்கலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு..



ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது..


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் மார்ச் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்வினை எழுத ஏப்ரல் 13அஅம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


சர்வர் கோளாறு காரணமாக விண்ணப்பிக்க முடியவில்லை என்பதால் காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஏப்.26 வரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது.." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog