ஆசிரியர் தகுதி தேர்வுக்கு(TET) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்... சர்வர் பிரச்னையால் அவகாசம் கேட்கும் தேர்வர்கள்..




2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.


அதனையடுத்து, ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருந்த பி.எட் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 12ஆம் தேதிவரை காலை வரை 3.41 லட்சம் தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்ப அவகாசம் ஏப்ரல் 13 உடன் நிறைவடைய உள்ள நிலையில், இணையதளம் தாமதமாக செயல்படுவதாக தேர்வர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.


ஒரே நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முயற்சித்ததால், சர்வர் கோளாறு ஏற்பட்டதாகவும், எனவே அந்த பேண்ட்வித் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பி.எட் இறுதியாண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்றுதான் வழங்கப்பட்டுள்ளதால், விண்ணபிக்கக் கூடுதல் அவகாசம் வேண்டுமென்று சில தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நேரடியாக அத்தகைய கோரிக்கைகள் வைக்கப்படவில்லை என்றும், கோரப்பட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog