TNPSC குரூப்-4க்கு விண்ணப்பிக்காத நபர்களின் கவனத்திற்கு.! தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு..!



குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


குரூப் 4 தேர்வுக்கு ஏப்ரல் 28-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 24-ம் தேதி தேர்வு நடைபெறும். தேர்வு அன்று காலை தேர்வு 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரத்திற்குத் தேர்வு நடைபெறும். மொத்தம் 7,301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவு மூலம் பூர்த்தி செய்யப்படும். 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.


அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியிடப்படும். நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என தேர்வாணையம் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை 7.08 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையம் கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog