1 முதல் 11ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை : அரசுப்பள்ளிகளில் ஜூன் 13ல் தொடங்கும் !!




தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள், கோடை விடுமுறைக்குப் பின் வரும் 13-ம் தேதி திறக்கப்பட உள்ளன.


1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதியும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் வரும் கல்வியாண்டுக்கான ( 2022-23 ) வகுப்புகள் தொடங்க உள்ளன.


வரும் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இடைப்பட்ட வகுப்புகளான 2,3,4,7,8,10 ஆகியவற்றுக்கும் ஜூன் 13-ம் தேதியே சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின் போதே அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் தாமதமாக தொடங்கும் சேர்க்கையால் மாணவர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog