புதுவையில் ஜூன் 23-ல் பள்ளிகள் திறப்பு: சனிக்கிழமைகளில் விடுமுறை




புதுச்சேரியில் ஜூன் 23ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.


கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஜூன் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.


11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog