குரூப்-2 தேர்வர்களுக்கு.. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!!!!




தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல என டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2,2A தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில்தேர்வு எழுதினர்.


இந்நிலையில் தற்போது தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல என்றும் இன்னும் 5நாட்களில் Tentative Answer Key வெளியிடப்படும் என்றும் தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன் பிறகு தான் வல்லுநர் குழு கூடி விடைகளை இறுதி செய்யும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog