தமிழக அரசு பள்ளிகளில் 30 பதிவேடு கணினிமயம்


அரசு பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வந்த, 30 பதிவேடுகள், முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளன.அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலா, 100 வகை பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன.


நாள், வாரம், மாதம் என, பல வகைப்பட்ட கால இடைவெளியில் இவற்றை பதிவு செய்து, அப்பதிவேடுகள் பள்ளிகளில் வைக்கப்பட்டிருக்கும்.


ஆசிரியர், தலைமை ஆசிரியர்களின் நிர்வாக சுமையை குறைக்க, 81 பதிவேடுகளை, 'எமிஸ்' என்ற இணையதளம் மூலம் பிரதி எடுக்க முடியும் என கண்டறியப்பட்டது. மேலும் தேவையற்ற, 11 பதிவேடுகளை நீக்கவும் அரசாணை வெளியிடப்பட்டது.இதன்படி, 30 பதிவேடுகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இவற்றை இனி நேரடியாக பராமரிக்க தேவையில்லை என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மீதி பதிவேடுகளும் ஜூனுக்குள் கணினிமயமாக்கப்படும் என, கல்வி அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.


Comments

Popular posts from this blog