குரூப்-4 தேர்வுக்கு தயாராக.. இலவச பாடநூல் வேண்டுமா.? இதோ சூப்பர் அறிவிப்பு.!!!!




தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.



கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. 


மேலும் குரூப்-4 தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிகொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்தால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, வீஏஓ தேர்வுக்கு இலவச பாடநூல் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும் என அகாதெமி தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்த அகாதெமியின் இயக்குனர் ச.வீரபாபு வெளியிட்ட செய்தியில், டிஎன்பிஎஸ்சி சார்பில் 7,382 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அனைவரும் இலவச பாட நூல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பாட நூல்களைப் பெற விரும்புவர்கள் தங்களது முகவரியுடன் 9176392791 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 


அதன்பிறகு முன்பதிவு செய்த அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி பாடநூல்கள் பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த பாடநூல்களை முழுமையாக படித்தால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog