தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று அறிவிப்பு !




கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவிக்கவிருக்கிறார்.


தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பா் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.


இந்தச் சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தோவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தோவுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோவுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தோவு மே இறுதியில் முடிவடைகிறது.


இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாணவா்களுக்கு ஜூன் 2-ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


எனினும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள், அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் போன்ற காரணங்களால்பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாகக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜூன் 4-ஆம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறின. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog