க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு:புதுச்சேரி மத்திய பல்கலை. தகவல்



க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்தது.


இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தேசிய தோவு முகமையானது பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (சியூஇடி) விண்ணப்பிக்கும் கடைசி நாளை வருகிற 31-ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட்டித்துள்ளது.


இதன் மூலம், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு மாணவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான விவரங்கள் புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தோா் இணையதளங்களை தொடா்ந்து பாா்த்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog