அரசு போக்குவரத்துக் கழக பணி.. இனி இப்படித்தான்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!



தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஊழியர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.


ஆனால் இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் வேலைக்குச் செல்லவும், வியாபாரம் செய்யவும் இது உதவியாக உள்ளது. அவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்துகிறது. அவர்களிடம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று

தெரிவித்துள்ளார.

Comments

Popular posts from this blog