TN TET தேர்வு: ஜூலை இறுதிக்குள் நடத்த பிளான். வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!!




தமிழகத்தில் அரசுபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வு வாயிலாக நியமனம் செய்யப்படுகிறது


இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. இவற்றில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 -5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடையவர்கள் எனவும் 2ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 -8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியுடைவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2019 ஆம் வருடம் இந்த தேர்வு நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.


தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதை அடுத்து அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. அதன்பின் இந்த வருடத்துக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதார்கள் பதிவு செய்திருந்தனர்.


இந்த தேர்வு கொள்குறி அடிப்படையில் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வாழ்நாள் முழுதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இப்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இத்தேர்வுகள் நிறைவடைந்ததும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தேர்வு வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog