TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கான விடை குறிப்புகள்.! ஆன்லைன் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.! முழு விவரம்




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,83,285 பேர் தேர்வினை எழுதவில்லை. சுமார் 9,94,878 பேர் தேர்வு எழுதினர். அதாவது 84.44% பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2A தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் இல்லை.


தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இன்று மாலைக்குள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும். ஆட்சேபனைகளை தொிவிக்கும் போது ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பாட புத்தகங்களை மட்டுமே மேற்கோளாக காண்பிக்க வேண்டும். ஆட்சேபனைகள் குறித்து வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்து அறிவிக்கும்.

Comments

Popular posts from this blog