நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்





திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.21-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது.


இந்த தேர்வைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி நிறைவுபெற்றது.


 அதனைத்தொடர்ந்து, திருத்திய மதிப்பெண்களைப் பட்டியலிட்டு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog