10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதியிலும் குழப்பம் விளைவித்த பள்ளிக்கல்வித்துறை



ஜூன் 20ம் தேதி காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வும், 12 மணியளவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.


அதாவது இன்று வெளியாகவிருந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகம் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. 10ம் வகுப்புக்கு கடந்த மே மாதம் 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடந்து முடிந்தது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.


இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணியானது கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தம் செய்து, மதிப்பெண்களை தொகுத்து அதனை தேர்வுத்துறை அலுவலர்கள் சரிபார்த்த பின்னர் தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடந்து முடிந்துள்ளது.


ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூன் 17ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு என்ற http://www.dge.tn.gov.in இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று தேர்வு முடிவுகள் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற 20ம் தேதி காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வும், 12மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog