உடனடி தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த 151 மாணவர்களுக்கு - பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிப்பு...




சென்னையில் ஆயிரத்து 361 பேர் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதவில்லை. அவர்களில் 151 மாணவர்கள் Instant Exam எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.


அவர்களுக்கு நந்தனம் அரசுப்பள்ளியில் 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


நந்தனம் பள்ளிக்கு வந்து பயிற்சி பெற இயலாத மாணவர்களுக்கு, அவரவர் படித்த பள்ளிகளிலேயே பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


பயிற்சிக்கு பின் Instant Exam நடத்தப்பட உள்ளது. இதேபோல் தேர்வு எழுதாத 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் Instant Exam நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.


Comments

Popular posts from this blog