மதிப்பெண் பட்டியல் தயார்; 17ல் பத்தாம் வகுப்பு 'ரிசல்ட்'




பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் சரிபார்ப்பு பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.


திட்டமிட்டபடி வரும், 17ம் தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள், மே மாதத்தில் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தம், ஜூன் 1ல் துவங்கி 10ம் தேதி முடிந்தது.


அதன் விபரம் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விடைத்தாளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரம், கணினி வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த விபரங்கள், முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக, தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.பாடவாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண், மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண், தேர்ச்சி பெற்றவர்களின் விபரம், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் சதவீதம் போன்றவை, பட்டியலாக தயாரிக்கப்படுகின்றன.


இந்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, திட்டமிட்டபடி வரும் 17ம் தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.-


Comments

Popular posts from this blog